கொரோனாவால் மாறிப்போன ஹஜ் யாத்திரை
2 மில்லியனுக்கும் அதிகமான யாத்ரீகர்கள் கலந்துகொள்ளும் ஹஜ் யாத்திரையில் தொற்றுநோய் குறித்த அச்சம் காரணமாக சவுதி அதிகாரிகளின் கடுமையான சுகாதார கட்டுப்பாடு மற்றும் நடவடிக்கைகளால் இவ்வருடம் சுமார் 1,000 வழிபாட்டாளர்கள் மட்டுமே யாத்திரைக்கு கலந்து கொள்ள முடியும்
நேற்று நடைபெற்ற ஹஜ் யாத்திரையில் வெறும் 1000 யாத்திரிகர்கள் மட்டுமே கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது

அனைத்து யாத்ரீகர்களும் மக்காவுக்கு வருவதற்கு முன்பு கொரோனா வைரஸைப் பரிசோதிக்க வேண்டியிருந்தது, மேலும் அவர்கள் யாத்திரைக்குப் பிறகு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சவுதி சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
