http://ceylononline.lk/

Ceylon Online News Portal

சிறையில் கொரோனா பீதியில் சசிகலா

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், 20 கைதிகள் உட்பட, 26 பேரை கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதனால், அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா கடும் பீதியடைந்துள்ளார்.பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்கு, புதிதாக வந்த கைதிகள் உட்பட, 150 பேரின் திரவ மாதிரி, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில், சிறையின் ஆறு ஊழியர்கள், 20 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது.சிறையில், 5,000க்கும் அதிகமான ஆண், பெண் கைதிகள் உள்ளனர். நேற்றைய தகவல்படி, ஆண் கைதிகளுக்கு மட்டுமே தொற்று தாக்கியதாக கூறப்படுகிறது. ஆண் கைதிகளின் சிறைக்குப் பக்கத்தில் தான், சசிகலா உட்பட பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால், சசிகலா உட்பட அனைவருமே பீதியடைந்துள்ளனர்.புதிதாக வரும் கைதிகளை, 21 நாட்கள் தனிமையில் வைத்து, எந்த அறிகுறியும் இல்லை என்றால் மட்டுமே சிறையில் அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *