பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
இரண்டு மாதங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை வருகின்றது.
இவரின் தந்தை சுஷாந்த் சிங்கின் காதலி ரியாவுக்கு எதிராக பீஹார் பொலீஸ்சில் புகார் அளித்தார்.
இதன்பின் வழக்கு விசாரணைக்காக பீகார் பொலீஸ் மகாராஷ்டிரா பொலீஸ்சுடன் மும்பை முரண்பட்ட நிலை இவ்வாறு வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றமன்றத்திற்கு வருவது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி ரியா சக்கரவர்த்தி உள்ளிட்ட 5 பேர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது.
முன்னதாக அமலாக்கத்துறை முன் கடந்த ஆக. 7-ம் தேதி ரியா சக்கரவர்த்தி ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
வழக்கு விசாரணை முழுவதையும் பீகாரில் இருந்து மும்பை போலீசுக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் ரியா சக்கரவர்த்தி தாக்கல் செய்த மனு குறித்தும் உச்சநீதிமன்றம் முடிவு செய்ய உள்ளது.
