நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர் ஒருவர் இனங் காணப்பட்டுள்ளனர்.
நீர் கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த இளைஞர் ஒருவர் கொவிட் தொற்றுக்குள்ளானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த நபர் கொரோனா சிகச்சைக்காக இரனவில நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக பிரதேச வைத்திய சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த இளைஞன் நோய் காரணமாக சிகிச்சைக்காக குறித்த வைத்தியசாலைக்கு வருகை தந்துள்ளார். இவர் மீது சந்தேகம் கொண்ட வைத்தியர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர் அதனை தொடர்ந்து இவருக்கு தொற்று பரவியமை உறுதி செய்யப்பட்டுள்ளது
