http://ceylononline.lk/

Ceylon Online News Portal

பொகவந்தலா பகுதியில் 40 தோட்டங்களுக்கு கொரோனா விழிப்புணர்வு.

நாட்டில் ஏற்பட்டள்ள அவதானமான நிலைமையினை கருத்தில் கொண்டு பொகவந்லாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 40 நாப்பது தோட்டங்களுக்கு விழிப்புனர் திட்டம் ஒன்றினை பொகவந்தலா பொலிஸ் நிலையம் தொண்டர் நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுத்துள்ளது,
கொவிட் 19 வைரஸ் பரவலினை கட்டுப்படுத்தும் நோக்காக கொண்டு இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த வைரஸ் தொடர்பாக தோட்ட மக்கள் மிகவும் கவயீனமாக இருப்பதனால் இத்தொற்று ஏற்பாட்டால் பாரிய பின் விளைவுகள் ஏற்படலாம் என்பதனை  கருத்தில் கொண்டு இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனை போது முகக் கவசம் அணிவது,சமூக இடைவெளி பேணுவது,கைகழுவுவது,வெளியிலிருந்து வருபவர்கள், கொவிட் தொற்று ஏற்பட்ட பிரதேசங்களில் இருந்து வருபவர்கள் செல்பவர்கள் தொடர்பாக அறிவித்தல்,நோய் தொற்றின் அறிகுறிகள் போன்ற ஒலிபெருக்கியின் மூலமும் துண்டு பிரசுரங்கள் வழங்குவதன் மூலம் பொது மக்கள் தெளிவு படுத்தப்பட்டன.
இதன் போது பொகவந்தலா,டின்சின்,கெட்பியன்,லொயினோன் உள்ளிட்ட நகரங்கள் தோட்டங்கள் என தெளிவுபடுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பொகவந்தலாவ பொலிஸ் நிலயம்  அதிகாரி சாந்த பண்டார கேட்டுக்கொண்டதற்கு அமைவாக பிரிடோ நிறுவன நிகழ்ச்சி திட்ட இயக்குனர்  எஸ்.கே. சந்திரசேகரனின் ஆலோசனை உதவியுடன் இன்று இப்பிரதேசத்தில் உள்ள்  40 இற்கு அதிகமான தோட்டங்களில் வாழும் பொது மக்களை நேரடியாக சந்தித்து கொரோனா தொற்று தொடர்பாகவும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் அதன் தாக்கம் பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டிய விடயங்கள் தொடர்பாக இதன் போது தெளிவு படுத்தப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில்  பொலிஸ் உத்தியோகஸ்தர் எஸ் பேரின்பநாயகம் பிரிடோ நிறுவன உத்தியோகஸ்தர்கள் கலந்துகொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *