அரிசி இறக்குமதி செய்ய 224 கோடி கடன் கோரிக்கை.
நாட்டில் அரிசி பற்றாக்குறை ஏற்டாது வைத்து கொள்வதற்காக அரிசியினை களஞ்சியப்படுத்தி வைப்பதற்காக இலங்கை சத்தோச நிறுவனம் மக்கள் வங்கியிடம் 224 கோடி ரூh கடனாக பெற்றுக்கொடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.
குறித்த கடன் தொகையினை ஆறு மாத காலத்தில் மீளசெலுத்தும் வரை அதற்காக திரைசேறி பிணையொன்றினை வழங்குமாறு வர்த்தகத்துறை அசை;சர் பந்துல குணவர்த்தன அமைச்சரவையில் கோரியுள்ளார்.
ஒக்டோபர் மாதம் தொடக்கம் ஜனவரி மாதம் வரை நாட்டில் தேவைகேற்ப அரிசியினை அரிசி உரிமையாளர்களால் வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது.எனவே இதனை நிவர்த்தி செய்யும் வகையில் முன்னேற்பாடாக இந்த அரிசியினை களஞ்சியப்படுத்த வேண்டும் என அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
