இருவேறு விபத்துக்களில் மூவர்பலி 10 வைத்தியசாiயில் அனுமதி.
இரத்தினபுரி அவிசாவலை பிரதான வீதியில் இன்று (16) அதிகாலை தி;வுரும்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர்; பலியாகியுள்ளனர்.
பின்னால் வந்த லொறி ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது,
குறித்த விபத்தில் 48,53,57 ஆகிய வயதுடையவர்கள் பலியாகியுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பாக லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதே வேளை இரத்தினபுரி அவிசாவலை பிரதான வீதியில் புஸ்ஸல்லாவ பகுதியில் இன்று காலை இரண்டு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
பயணிகள் பஸ் ஒன்றும் ஊழியர்களை ஏற்றிச்சென்ற பஸ் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
இவ்விபத்துக்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
