296 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பினர்
கொரோனா தொற்றினால் வெளிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்களை மீட்கும் அரசாங்க நடவடிக்கையில் இன்று தென்கொரியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளிலிருந்து 296 இலங்கையர்கள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
பெரும்பாலான இலங்கையர்கள் வேலைவாய்ப்பிற்காக சென்றவர்கள் என்பதும் இவர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
