கல்கிஸ்ஸ கடலில் நீராடச் சென்று காணாமல் போன இரளைஞர்களை தேடும் பணிகள் இன்று தொடர்கிறது.
கல்கிஸ்ஸ கடலில் நீராடச்சென்று காணாமல் போன இரண்டு இளைஞர்களை தேடும் பணிகள் ஆரம்பித்துள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (23) மாலை கல்கிஸ்ஸ கடலில் நீராடச் சென்ற ஏழு இளைஞர்கள் நீரில் மூல்கியுள்ளனர்.இந்நிலையில் 05 இளைஞர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டு இளைஞர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இவ்வாறு காணாமல் போன இளைஞர்கள் நுவரெலியா பூண்டுலோயா பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞர்கள் என்றும் இவர்கள் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளன.
