இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த 3 பேருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2,885 ஆக அதிகரித்துள்ளது.
