ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலுக்கு உறுப்பினர் தெரிவு பிரச்சனைக்கு தீர்வு
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வது தொடர்பாக ஏற்பட்டிருந்த பிரச்சினை பங்காளி கட்சிகளின் விட்டுக் கொடுப்பினால் முடிவுக்கு வந்துள்ளது.
தேசியப் பட்டியலுக்கு 7 உறுப்பினர்களைத் தெரிவு செய்வது தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுக்க அதன் தலைவரான சஜித் பிரேமதாசவிற்கு அதிகாரம் கொடுத்து இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்கள்.
இதைனையடுத்து, தேசியப் பட்டியல் சர்ச்சையை தமக்குள் ஒற்றுமையாகத் தீர்த்துக்கொள்வதாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.
