பிரபல பாதாள உலகத்தலைவர் அங்கொட லொக்கா குழுவை சேர்ந்த நபர் சுட்டுக் கொலை
உயிரிழந்ததாக கூறப்படும் பிரபல பாதாள உலகத்தலைவர் அங்கொட லொக்காவுடைய குழுவை சேர்ந்த நபர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
´சொல்டா´ என்ற அசித ஹேமதிலக என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் அங்கொட லொக்கா குழுவின் பிரதான துப்பாக்கிதாரி.
பொலிஸாரை நோக்கி கைக்குண்டு ஒன்றை வீச முற்பட்ட போது அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு, வெலிவிட, முல்லேரியவை பகுதியில் வைத்து அவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
