இலங்கையில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று
இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தோனேஷியாவில் இருந்து வந்த ஒருவருக்கும்(1),
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த ஒருவருக்கும்(1),
சவுதி அரேபியாவில இருந்து வந்த ஒருவருக்கும்(1) இன்று அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில், நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2,880 ஆக பதிவாகியுள்ளது.
இவர்களில் 2,622 பேர் குணமடைந்துள்ளதுடன், 247 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
