http://ceylononline.lk/

Ceylon Online News Portal

இலங்கையின் 9 வது நாடாளுமன்றத்திற்கு எட்டு பெண் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்

2020 பொதுத் தேர்தலில் பெறப்பட்ட முன்னுரிமை வாக்குகள் மூலம் இலங்கையின் 9 வது நாடாளுமன்றத்திற்கு எட்டு பெண் வேட்பாளர்கள்  தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் 

உலகின் முதலாவது பெண் பிரதமர்   இலங்கை என்ற போதும் பாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவம் இலங்கை வரலாற்றில் இதுவரை 6.5% ஐ தாண்டவில்லை. 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (எஸ்.எல்.பி.பி) பவித்ரா வன்னியராச்சி மற்றும் முதிதா சோய்சா, மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி (எஸ்.ஜே.பி) தலதா அத்துகோரலே ஆகியோர் இரத்தினபுரி மாவட்டத்தில் (3  பேர் )இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ராஜிகா விக்ரமசிங்க சப்ரகமுவ  மாகாணத்தின் கேகாலை மாவட்டத்தில் (ஒருவர்) இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கம்பாஹா மாவட்டத்திலிருந்து(2  பேர் ) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சுதர்ஷனி பெர்னாண்டோ மற்றும் கோகிலா குணவர்தன ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் கீதா குமாரசிங்க  காலி  மாவட்டத்திலிருந்து  (ஒருவர்)தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தி ரோஹினி காவிரத்னே மாதலே மாவட்டத்தில்(ஒருவர்) இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இருப்பினும், அரசியல் கட்சிகள் சமர்ப்பித்த தேசிய பட்டியல்கள் வழியாக பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களைப் பொறுத்து நாடாளுமன்றத்தில் பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *