இலங்கையில் கொரோனா தொற்று எண்ணிக்கையானது 2815 ஆக அதிகரித்துள்ளது
சமீபத்தில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட லங்காபுர மாவட்ட செயலக ஊழியர் உடன் நெருங்கிய தொடர்பை பேணியிருந்த உறவினர் ஒருவருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து இலங்கையில் கொரோனா தொற்று எண்ணிக்கையானது 2815 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 413 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் 48 பேர் சந்தேகத்தில் கண்காணிக்க படுவதாகவும் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

