போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கழுகு மீட்பு – 15 கிலோ தூக்கிச்செல்லும் திறன்
பாதாள உலக வர்த்தகரான ‘அங்கோடா லொக்கா’ போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கழுகு இன்று போலீசாரால் கைப்பற்றப்பட்டது.
மீகோடாவில் உள்ள ஒரு கோழி பண்ணையிலிருந்து கைப்பற்றப்பட்ட இந்த கழுகு ஒரே சமயத்தில் 15 கிலோ போதைப் பொருளை எடுத்துச் செல்லும் சக்தி வாய்ந்தது என்று கூறப்படுகிறது.
அங்கோடா லொக்காவின் நண்பர் என்று சந்தேகிக்கப்படும் பண்ணையின் உரிமையாளர் மற்றும் மற்றொரு நபர் துப்பாக்கி மற்றும் 10 தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டனர்.
மேற்கு மாகாண போலீஸ் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது மேற்படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

