கொரோனா நோயாளியை வீட்டிற்குள் பூட்டிய உரிமையாளர்: இந்தியாவின் சோகம்
இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் வயதான தாயாருக்கும் அவரது மகனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்ட உடன் அவர்களை சுய தனிமைப்படுத்துதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட அதிகாரிகள் வீட்டின் உரிமையாளருக்கு தகவல் அளித்து அனைவரையும் தற்பாதுகாப்பு நடவடிக்கைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
சுகாதார அதிகாரிகள் சென்ற பிறகு வீட்டின் உரிமையாளர் தொற்று பாதித்த நபரையும், அவருடைய தாயையும் வீட்டுக்குள் வைத்து பூட்டியுள்ளார்.
இதைத்தொடர்ந்து தொலைபேசியின் மூலம் புகார் அளித்ததுடன் விரைந்து வந்த பொலிசார் பாதித்த நபர்களை மருத்துவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் வீட்டின் உரிமையாளரை எச்சரிக்கவும் செய்தனர்.

