சிறை கைதி ஒருவரின் திட்டமிட்ட போதைப்பொருள் கடத்தல் – விசாரணையில் அம்பலம்
சமீபத்தில் பொரலஸ்கமுவ பகுதியில் போதைப் பொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட 6 பேரிடமும் தொடர்ந்து எடுக்கப்பட்ட விசாரணையில், சிறை கைதி ஒருவரின் திட்டமிட்ட போதைப்பொருள் கடத்தல் இது என்று அம்பலமாகியுள்ளது.
ஒரு கிலோவுக்கும் அதிகமான ஹெராயின்போதைப்பொருள் மற்றும் 10 லட்சம் பணம் ஆகியவற்றுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பல்வேறு பிரதேசங்களுக்கு போதைப் பொருளை விநியோகிக்கும் நடவடிக்கையில் திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சாலிய சேனாரத்ன கூறினார்.
விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

