ஏப்ரல் தாக்குதல் தொடர்பாக இந்திய புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது எப்படி? வெளியான புதுத் தகவல்
அரச புலனாய்வுப் பிரிவின் அதிகாரியொருவர் சமீபத்தில் ஆணைக்குழுவின் முன்பாக சாட்சி வழங்கும்போது இந்திய புலனாய்வு அதிகாரிகளுக்கு எப்படி ஏப்ரல் தாக்குதல் தொடர்பான தகவல்கள் கிடைத்தது என முக்கிய கருத்தை சாட்சிப்படுத்தினார்.
ஏப்ரல் 21 தாக்குதலின் முக்கிய குற்றவாளியான சஹ்ரான் ஹஷீமின் நண்பர் ஒருவரே இந்திய புலனாய்வுப் பிரிவிற்கு தாக்குதல் தொடர்பாக தகவல் வழங்கியதாக தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இந்த விடயம் வௌியானது.

