போதைப்பொருள் ஒழிப்பு செயலணி : ஜனாதிபதி விசேட அறிவிப்பு
நாட்டில் நிலவும் போதைப்பொருள் பிரச்சினையை ஒழிப்பதற்கும் பாதாள உலகக் குழுக்களை அழிப்பதற்கும் ஒரு புதிய போதைப்பொருள் ஒழிப்பு செயலணி ஜனாதிபதி செயலகத்தினால் நிறுவப்பட உள்ளதாக இன்று காலி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.
மேலும்இங்கு குறிப்பிடுகையில்,
வளமான இலங்கைக்கான எதிர்கால இலக்கை இதன் மூலம் நாட்டு மக்கள் அடைய வழிவகுக்கும் என்று தெரிவித்தார்.
கிராமிய பிரதேசங்களில் தங்களுடைய விபரங்களை தெரிவிக்காமல் போதைப்பொருள் ஒழிப்பு செயல் அணிக்கு தகவல்களை அளிப்பதன் மூலம் நாட்டில் நிலவும் பிரதான பிரச்சினை முற்றுப் பெற வாய்ப்பு உள்ளதாக கூறினார்.

