கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் கடமையிலிருந்து விலகிச் செல்லும் சூழலுக்கு தள்ளப்படுவோம்
பொது சுகாதார பரிசோதகர்கள்களான எங்களுக்கு தேவையான அதிகாரம் இல்லாமல் எப்படி நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பை சுகாதார அமைச்சகம் எதிர்பார்க்க முடியும்.
கடந்த வெள்ளிக் கிழமையிலிருந்து இன்றைய நாள் வரை எங்கள் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்கவில்லை. இதற்கான தீர்மானம் விரைவாக எட்டப்படவில்லை என்றால் வெள்ளிக்கிழமை முதல் மருத்துவ விடுப்பில், கடமையில் இருந்து விலகி எங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இவ்வாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோகன தெரிவித்தார்
