வெற்றிகரமாக கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்த ஹாங்காங்கில் மீண்டும் தீவிர பரவல்
சீனாவிலிருந்து கொரோனா தொற்று வேகமாக ஹாங்காங்கில் பரவத் தொடங்கிய காலத்தில் வெற்றிகரமாக அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
ஆனால் கடந்த 15 நாட்களில் மட்டும் புதிதாக 500 தொற்றுக்குள்ளானவர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தலைமை அதிகாரி கேரி லாம் அறிவித்தார். இதில் நேற்று மட்டும் புதிய தொற்றுக்குள்ளானவர்கள் 108 மொத்த கொரோனாபாதிப்பு 1,886 ஆக உயர்ந்துள்ளது.
75 லட்சம் மக்கள் தொகை கொண்ட அந்த நகரில் யாரிடமிருந்து தொற்று ஏற்பட்டது என்பதை கண்டறிய முடியவில்லை என்று கூறினார்.
அனைத்து கடைகளும் நைட் கிளப், உணவு விடுதிகளும் மூடப்பட்டு தீவிரமான பாதுகாப்பு நடவடிக்கைகள் அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது

