http://ceylononline.lk/

Ceylon Online News Portal

கொரோனா தடுப்பு விதிகளை மீறிய ஆர்ச்சர்; ஒழுங்கு நடவடிக்கை எடுத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்

கொரோனா தடுப்பு விதிகளான உயிர் பாதுகாப்பு வளையத்தை (bio-secure protocols) மீறியதாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர்  கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கைக்கு உள்ளானார்.

இரண்டு ஆட்டங்களுக்கு நடுவே ஒருவருக்கும் தெரியாமல் தனது வீட்டிற்கு சென்று வந்த ஆர்ச்சர்  கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக நடவடிக்கைகளுக்கு உள்ளானார்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இருந்து அவரை  விலக்கி வைக்கவும் 5 நாள் தனிமைப்படுத்திக் கொள்ளவும் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது.

இதன் பின் நடைபெற்ற விசாரணையில் அபராதம் விதிக்கப்பட்டதுடன் எழுத்துப்பூர்வமான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *