சந்தேக நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி
சுயதனிமைப்படுத்தலில் இருந்த சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த நபர் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணிய ஒருவர் எனஅரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவரை இன்றையதினதில் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,703 ஆக உயர்ந்துள்ளது.
