இந்தியாவில் ஒரே நாளில் 500 பேர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 23 ஆயிரத்து 174
உலகெங்கும், ஒரு கோடியே, 28 லட்சத்து, 56 ஆயிரத்து, 364 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதில், 74 லட்சத்து, 88 ஆயிரத்து, 194 பேர் குணம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில், ஐந்து லட்சத்து, 67 ஆயிரத்து, 914 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை இல்லாத அளவாக இந்தியாவில் 28,701 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் 500 பேர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 23 ஆயிரத்து 174 ஆக உள்ளது.

அதிக பாதிப்பு மற்றும் பலியில், அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு, 33 லட்சத்து, 55 ஆயிரத்து, 781 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அதில், ஒரு லட்சத்து, 37 ஆயிரத்து, 403 பேர் உயிரிழந்துள்ளனர்.
