மின்சாரக் கட்டணங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான விசாரணை அறிக்கை அமைச்சரவையில் இன்று சமர்ப்பிப்பு!
கொரோனா வைரஸ் காலத்தில் மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்க இந்தக் குழு நியமிக்கப்பட்டது.
இந்த அறிக்கையில் மின்சாரக் கட்டணங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான பல விவரங்கள் அறிக்கையில் உள்ளதுடன், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் அமைச்சரவையின் நிலைப்பாட்டின் அடிப்படையில் செலுத்தப்படும் என்று மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இந்த குழு நேற்றைய தினம் மின் மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு தனது இறுதி அறிக்கையை நேற்று சமர்ப்பித்தது.
