முல்லைத் தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது (வீடியோ இணைப்பு)
கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் உத்தரவில் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் 115 நாட்களுக்குபிறகு மீண்டும் கல்வி அமைச்சின் உத்தரவிற்கு அமைவாக முல்லைத் தீவு மாவட்டத்தில் உள்ள துணுகாய் வலயம் முல்லைத்தீவு வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளிலும் தரம் 05,11,13 ஆகியவகுப்பு மாணவர்கள் சுகாதாரநடைமுறைக்கு அமைவாக வரவழைக்கப்பட்டு அவர்களின் கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ந.கலைச்செல்வன்
முல்லைத்தீவு
