http://ceylononline.lk/

Ceylon Online News Portal

வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க கடைபிடிக்க வேண்டிய விரதம்

வீட்டில் எப்போதும் மகாலட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கவும், செல்வம் பெருகவும் கடைபிடிக்க வேண்டிய விரதம் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்..
அதிகாலையில் எழுந்ததும் கொல்லைபுற வாசலை திறந்து வைத்து, அதன்பின் தலைவாசலைத் திறக்க வேண்டும்.
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கை ஏற்றி வழிபட வேண்டும். வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தண்ணீர் கொடுக்க வேண்டும்.

மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவம் விலகி பாக்கியங்களும், பொருளும் சந்தோஷமும் பெருகும்.

பவுர்ணமி தோறும் விரதம் இருந்து மாலையில் குளித்து சத்ய நாராயணரை துளசி, செண்பக மலர்களால் அர்ச்சனை செய்து பால் பாயாசம், கற்கண்டு, பழ வகைகள் வைத்து வணங்கிய பின்னரே, இரவு உணவு உட்கொள்ள வேண்டும்.

வைரம் வெள்ளி பாத்திரங்கள் லட்சுமி கடாட்சம் உள்ளவர்களுக்கே கிடைக்கும். ஒருவர் தனக்கு சீராக அளிக்கப்பட்ட வெள்ளிப் பாத்திரங்களை தன் காலத்தில் விற்கவோ, தன் பிள்ளைகளுக்கு கூட அன்பளிப்பாக கொடுக்கவோ கூடாது. தன் காலத்திற்கு பின்னரே அவர்களுக்கு சேர வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *