சற்று முன்னார் இலங்கையின் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1980 ஆக அதிகரிப்பு.
இந்தியாவிலிருந்து வருகை தந்த 29 பேர் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டதனை தொடர்ந்து இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1980 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று பிரிவு அறிவித்துள்ளது.
இதற்கமைய தற்போது 421 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் 1548 பேர் இது வரை பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
