சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகசு வாகனங்கள் அரச உடைமையாக்கப்படும்.
சட்ட விரோதமான முறையில் இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 300 இற்கும் அதிகமாக வாகனங்களை சுங்க திணைக்களத்தினர் பறிமுதல் செய்துள்ளன
கடந்த சில மாதங்களுக்குள் குறித்த வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதை அரசாங்கம் தடைசெய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த அதிசொகுசு வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் உள்ள சட்ட திட்டங்களின் அடிப்படையில் குறித்த வாகனங்கள் அரசுடமையாக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சுங்க திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
