அரசியல்வாதி ஒருவரால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டி மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு
மெனிக்ஹின்ன வைத்தியசாலையில் பிரதம வைத்திய அதிகாரி, பிரதேச அரசியல்வாதி ஒருவரால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டி மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் இன்று அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
இதனடிப்படையில், இன்று காலை 08 மணி முதல் அடையாள பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கண்டி மாவட்ட செயலாளர் டொக்டர் ஏ.எம். பிரேமலால் தெரிவித்தார்.
