இலங்கையில் கொவிட் 19 தொற்று காரணமாக மற்றுமொரு பெண் பலி.
கொவிட் 19 நோய் தொற்றுக்குள்ளாகி கொழும்பு ஐ.டி.எச் தொற்றுநோய் பிரிவில் சிகச்சைப்பெற்று வந்த பெண் ஒருவர் இன்று மருத்தவ மனையில் பலியான தாக தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் அசித்த அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய 47 வயது பெண்ணொருவரே இவ்வாறு கொவிட் 19 தொற்றுக்காரணமாக பலியாகியுள்ளார்.
இவர் புற்றுநோய் இருதய நோய் ஆகிய நோய்களுக்கு உள்ளாகியுள்ளாதாக சுகாதார பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
இன்று பலியான நபருடன் இது வரை இலங்கையில் கொவிட் 19 தொற்றுதியான 12 மரணங்கள் சம்பவித்துள்ளதாக கொவிட் 19 கட்டுப்பாட்டு செயலணி தெரிவித்துள்ளது.
