http://ceylononline.lk/

Ceylon Online News Portal

சிங்கராஜா வனத்திற்கு அருகே சாலை புனரமைப்பு பணிகளை நிறுத்தி வைக்க ஜனாதிபதி உத்தரவு.

சிங்கராஜ வனம் மற்றும் உலக பாரம்பரிய தளத்திற்கு அருகே நடைபெற்று வரும் சாலை புனரமைப்பு பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளதாக சாலை மேம்பாட்டு ஆணையம் (ஆர்.டி.ஏ) தெரிவித்துள்ளது.

நாட்டிலுள்ள உலக மரபுரிமைகளில் முதன்மையாக விளங்கும் சிங்கராஜ வனத்தின் எல்லையில் இம்மாதத்தின் முதல் வாரத்தில் வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

8 அடி அகலமான கொங்ரீட் வீதி இதுவரை அங்கு காணப்பட்டதுடன், அதனை 12 அடி அகலமாக விஸ்தரித்து புதிய வீதி நிர்மாணிக்கப்படுவதாக வன பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் இலங்கை இராணுவம் இணைந்து இந்த செயற்றிட்டத்தை முன்னெடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *