ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸின் கொழும்பு-ஷாங்காய் விமான சேவையை சீனா ரத்து செய்தது
பல பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி படுத்தப்படுவதால் (Covid 19 PCR Possitive), எத்தியாட் ஏயர்வேஸின் அபுதாபி-ஷாங்காய் விமானம், சீனா ஈஸ்டர்ன் ஏயர்லைன்ஸின் மணிலா-ஷாங்காய் விமானம் மற்றும் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸின் கொழும்பு-ஷாங்காய் ஆகிய விமான சேவை இடைநிறுத்தப்படும் என்று சீனாவின் சிவில் விமான ஒழுங்குமுறை அறிவித்துள்ளது.
இலங்கை ஏயர்லைன்ஸின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், துபாயில் இருந்து ஷாங்காய் செல்லும் விமானம் இலங்கையில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (பிஐஏ) ஒரு குறுகிய நிறுத்தத்தை மட்டுமே செய்தது.
“விமானம் இலங்கையிலிருந்து பயணிகளை ஏற்றிச் செல்லவில்லை, விமானத்தில் இருந்த பயணிகள் இலங்கைக்குள் நுழையவில்லை” என்று இலங்கை ஏயர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் தெளிவுபடுத்தினார்.
