நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட கணவன், உருளைக்கிழங்கு மசாலாவை சாப்பிட மறுத்ததால் விழுந்த அடி
ஆமதாபாத்தை சேர்ந்த ஹர்சத்(40) தனது மனைவி தாராவுடன் இந்தியா,குஜராத் மாநிலத்தில் வசித்து வருகிறார்.
இவருக்கு கடுமையான நீரிழிவு நோய் உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய நிலையில் இரவு உணவிற்காக தயாரிக்கப்பட்ட சப்பாத்திக்கு உருளைக்கிழங்கு மசாலாவை மனைவி கொடுத்துள்ளார்.
நீரழிவு நோயினால் மசாலாவை சாப்பிட மறுத்த காரணத்தால் கடுமையாக மனைவி தாக்கி அவரின் கை எலும்பை உடைத்த உள்ளார்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து உடன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
