வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தந்தவர்கள் மீண்டும் செல்வதில் பெறும் சிரமம்.
பொது தேர்தலினை முன்னிட்டு வாக்களிப்பதற்காக வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தந்தவர்கள் மீண்டும் வெளி மவாட்டங்களுக்கு செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருப்பதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
ஹட்டன் நகரிலிருந்து இன்று (09) காலை கொழும்புக்கு செல்வதற்காக வருகை தந்த பெரும் எண்ணிக்கையிலான பிரயாணிகள் போதுமான அளவில் பஸ் இல்லாததன் காரணமாக பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
ஒரு சிலர் நேற்றும் தனது பயணத்தினை தொடர்ந்தும் பஸ் போதியளவு இல்லாத காரணத்தினால் நேற்று செல்ல முடியாது போயின.இன்று காலை முதல் பலர் பல நெடுந் தூரம் வரிசையி;ல் பல மணி நேரம் நின்று செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பலர் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை இன்றைய தினம் பகல் பன்னிரண்டு மணி வரை சுமார் 30 இலங்கை போக்கு வரத்து சேவைக்கு சொந்தமான பஸ்கள் சேவைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது வெளி மாவட்டங்களிலிருந்து வரும் பஸ்களுடன் தேவைக்கேற்ப பஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் டிப்போவின் நேரக் கட்டுப்பாட்டாளர். தெரிவித்தார்.

இது குறித்து பொது மக்கள் மற்றும் நேரக்கட்டுப்பாட்டாளர் கருத்து தெரிவிக்கையில்..
நாங்கள் இங்கு வந்து இரண்டு மணித்தியாலங்களாக நிற்கிறோம் இது வரை பஸ்கள் எதுவும் வரவில்லை.அப்படியே வந்தாலும் கூட இந்த வரிசையிலிருந்து செல்வதற்கு இன்னும் இரண்டு மணித்தியாலங்களாவுது எடுக்கும் ஒரு சிலர் நேற்றிலிருந்து கொழும்பு செல்வதற்கு வருகை தந்துள்ளனர் என இவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
