13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கு பெற தடை
பிரபல தனியார் தொலைக்காட்சி நிலையத்தின் ரியாலிட்டி ஷோவுக்கான மேடை அமைப்பாளரான 54 வயதான நபர் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டதை அடுத்து 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கு பெற தடை விதிக்கும் வர்த்தமானி ஒன்றை விரைவில் அரசாங்கம் வெளியிட உள்ளது.
விளம்பரங்கள் மற்றும் பின்னணி குரல் கொடுப்பது போன்றவற்றில் சிறுவர்களை பயன்படுத்துவது சம்பந்தமாக கடுமையான வழிகாட்டுதல்கள் அறிமுகப்படுத்த போவதாக
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளது என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி முதித்த விதானபத்திரன தெரிவித்தார்.

