இலங்கையின் மிகப்பெரிய சமூக பாதுகாப்புத் திட்டம் பெரிய இழப்பை சந்தித்து கொண்டுள்ளது
மத்திய வங்கி தகவலின்படி 2020 முதல் காலாண்டின் முடிவில் மொத்தம் 39.08 பில்லியன் ரூபாய் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) பெரும் இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவிக்கின்றன.
EPF தற்போது இலங்கையின் மிகப்பெரிய சமூக பாதுகாப்புத் திட்டமாகும், மேலும் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலம் இந்த நிதி பெரும் இழப்பை சந்தித்துள்ளது.

83 பட்டியலிடப்பட்ட பங்குகளில் 84.05 பில்லியன் EPF நிதி முதலீடு செய்யப்பட்டிருந்தது மிகவும் அதிர்ச்சிகரமான முறையில் 2020 முதல் காலாண்டு தொடக்கத்தில் அதன் சந்தை மதிப்பு 44.97 பில்லியன்களாக குறைந்துள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு, கொழும்பு பங்குச் சந்தையில் EPF முதலீடுகளை மொத்த நிதியில் 03% ஆகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
