கொவிட் 19 வைரஸ் தாக்கததில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.
இலங்கையில் கொவிட் 19 தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தொற்று நோய் பிரிவு அறிவித்துள்ளது.
இது கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக 2745 பேர் இத்தொற்றுக்குள்ளாகியிருந்தனர்.
22 ம் திகதி இரவு 10.20 மணி வரை சுமார். 2064 பேர் இது வரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் 670 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் அப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது,
