உயர்தர மற்றும் தரம் ஐந்து புலமைபரிசில் பரீட்சைகள் பற்றிய இறுதி திகதி இன்று வெளியிடப்படும்.
கல்வி பொது உயர்தர பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை நடைபெறும் திகதி குறித்து இறுதி தீர்மானம் எடுப்பதற்காக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, மற்றும் பரீட்சைகள் ஆணையாளர் உடனான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.
குறித்த கலந்துரையாடலினை தொடர்ந்து பரீட்சை குறித்து திகதிகள் வெளியிடப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதே வேளை பாடசாலை விடுமுறை காலம் எதிர்வரும் 27 திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

