http://ceylononline.lk/

Ceylon Online News Portal

ரயிலில் பாய்ந்து இளைஞன் பலி

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் இளைஞன் ஒருவர் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தலவாக்கலை மற்றும் கொட்டக்கலை ரயில் நிலையங்களுக்கு இடையிலான சென்கிளையார் பகுதியில் 19.7.2020 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 11.50 மணியளவில்  இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் தலவாக்கலை சென்கிளையார் தோட்டத்தைச் சேர்ந்த  பாலகிருஷ்ணன் அருள் பிரசாத் (வயது 24) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் இளைஞன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என தெரிவித்த தலவாக்கலை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ருவான் பெர்னாந்து தலைமையில் மேற்கொண்டுள்ளனர்.

தலவாக்கலை பி.கேதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *