இங்கிலாந்தில் 120000 பேர் மரணமடைய வாய்ப்புகள் உள்ளது என எச்சரிக்கை
இங்கிலாந்தில் வரும் குளிர்காலத்தில் கொரோனா இரண்டாவது அலையால் 120000 பேர் மரணமடைய வாய்ப்புகள் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இதை தடுக்க அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். தேசிய சுகாதார சேவை அமைப்புக்கு 300 கோடிபவுண்டுக்கும் கூடுதலான நிதி உதவி அளிக்கப்படும் என கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள தேசிய சுகாதார சேவை அமைப்புக்கு அதிக நிதி வழங்குவதாக அரசு அளித்த வாக்குறுதியே நாட்டில் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

