தேர்தலுக்கான பாதுகாப்பு ஆலோசனை வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் விரைவில் ; அரச சிரேஷ்ட சட்டத்தரணி நிஷாரா ஜெயரத்ன
நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான பாதுகாப்பு வழிகாட்டி ஆலோசனைகளை சுகாதார அமைச்சகம் தயாரித்து அதை சட்டமா அதிபரின் ஒப்புதலுக்கு சமர்ப்பித்திருந்தது.
தற்பொழுது அதற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளமையினால் நாளை அல்லது அதற்கு மறுதினம் இந்த பாதுகாப்பு ஆலோசனை வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானி வெளியிடப்படும் என்று சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளரும் அரச சிரேஷ்ட சட்டத்தரணி நிஷாரா ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

