பாரிய அளவில் பணியாளர்களை வேலை நீக்க தயாராகும் ஏயர் இந்தியா நிறுவனம்
இந்திய அரசுக்கு சொந்தமான ஏயர் இந்தியா நிறுவனம் ஏற்கனவே நிதிச் சுமையில் சிக்கி தவித்து வருகின்றது.
இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக மேலும் பாரிய நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால் நிறுவனத்தை மீட்டெடுக்கும் பொருட்டு தமது ஊழியர்களை குறைந்தது ஆறு மாதங்களில் இருந்து ஐந்து வருடங்களுக்கு ஊதியம் இல்லாத கட்டாய விடுப்பு டன் அனுப்ப முடிவு செய்துள்ளது.

இதற்காக ஏயர் இந்தியா நிறுவனம் ,இயக்குநர்கள் குழு மற்றும் ஏயர் இந்தியா நிறுவன தலைவர் ரஜீவ் பன்சாலுக்கு ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்க தேவையான அங்கீகாரம் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது
Air India has started process of identifying employees — based on factors like efficiency, health and redundancy — who will be sent on compulsory leave without pay for up to 5 years: Official order
— Press Trust of India (@PTI_News) July 15, 2020
