நாட்டில் மேலும் 05 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு
நாட்டில் மேலும் 05 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2662 ஆக உயர்ந்துள்ளது. தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 663 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்றைய தினத்தில் மட்டும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் கந்தக்காடு கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் என அறியப்படுகிறது.
